Thursday 23 February 2012

நிஜமாகாத நிழல்


நிஜமாகாத நிழல்





அப்பா அன்று திட்டிய வார்த்தையினை ரவியினால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவனுக்கு பதினேழு வயதுதான் என்றபோதிலும், தான் செய்த ஒரு சிறிய தவறுதலுக்காக இப்படி தன்னை தனது நண்பர்கள் அறிய அத்தனை உரத்தக் குரலில் ஊரறிய தந்தை உறுமிக்கொண்டிருக்கிறாரே என ரவி பொறுமிக்கொண்டிருந்தான். ஆற்றிற்குச் சென்று குளிக்கக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையினை மீறியதால் வந்த விளைவினை தண்டணையாக அனுபவித்துக்கொண்டிருந்தான் ரவி. ஒரு புறம் தந்தை அடிக்கும் அடிகளைச் சகித்துக்கொண்டிருக்க அவனுக்கு பெலனிருந்தபோதிலும், அதனை நண்பர்கள் பார்க்கின்றதை அவனால் சகிக்க முடியவில்லை. உடன் பிறந்த சகோதரர்களும் அப்பாவின் கைக்குத் தன்னைத் தப்புவிக்காமல், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனரே என்ற வெறுப்பும் அவனுக்குள் நெருப்பாய் கிளம்பியது. அப்போது ஓடிவந்தாள் அவனது மூத்த தமக்கை, 'போதும் விடுங்க, ஏதோ ஒரு நாள் தெரியாம ஆத்துல குளிக்கப் போயிட்டான், இனிம போக மாட்டான்' என்று அப்பாவிடம் அவள் பேசியபோது சற்று அடங்கியது அவன் கோபக் கனல். 

அப்பாவிற்குப் பயந்து தண்டனையை அனுபவித்துக்கொண்டு வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ரவியின் மனது சிறகடித்து தன்னோடு சேர்ந்து ஆற்றிற்கு வந்த நண்பர்களின் வீட்டிற்குப் பயணமானது. அவனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு நண்பனும் இவனோடு சேர்ந்து அதே ஆற்றில் குளித்தவன், என்றபோதிலும் அவனது தந்தை அவனைத் தண்டிக்காததைக் கண்டு இடிந்துபோயிருந்தான் ரவி. ஏன் எனது தந்தை மட்டும் என்னைத் தண்டிக்கின்றார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திணறிக்கொண்டிருந்தது அவனது மூளை. நான் அந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும் என நிஜமாகாத நிழலைக் கனவாகக் கண்டு நொந்துகொண்டிருந்தான் ரவி. ஒரு குற்றம் செய்ததற்காக, தான் முன்னே செய்த எத்தனையோ குற்றங்களை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி தந்தை எரிந்து விழுவதைக் கண்டு ரவியின் மனது முறிந்துகொண்டிருந்தது. குடும்பத்தின் மேல் கோபமுற்று வெளிNயினால் மட்டுமே விடுதலை என்ற முடிவினை எடுத்தான் ரவி. 

அது ஒரு மாலை நேரம், தனது தெருவில் ஆலய மணி ஒலித்துக்கொண்டிருந்தது, ரவியின் தாய் மாலை ஆராதனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். 'கோயிலுக்கு வரலியா?' என்ற தாயின் கேள்விக்கு 'போம்மா வாரேன்' என்று சாதுரியமாகப் பதில் பேசி தப்பிக்கொண்ட ரவி, அந்த நேரத்தில் வீட்டிற்கு விடைகொடுத்துவிட்டு பயணமானான். எப்படியோ கையில் கிடைத்த காசு கொஞ்சம், அதனை ஒரு துணிப்பையில் பத்திரமாய் பொதிந்து வைத்துக்கொண்டு வெளியேறினான் வீட்டைவிட்டு. வழியில் அவனைக் கண்ட முதியவர் ஒருவர், அவனிடம் 'தம்பி எங்க போற, வீட்ல சொல்லிட்டுத்தான் போறியா?' என குறுக்கிட்டபோது, சினம் வந்தபோதிலும் சிரித்து மழுப்பிக்கொண்டு பேருந்து நிலயத்தை அடைந்தான் ரவி. எங்கு போவது? என்ன செய்வது? என அறியாமல் வெறுமையாய் இருந்தது ரவியின் மனது. எதை எதையோ நினைத்துக்கொண்டு இரவு பேருந்து நிலையத்தை அடைந்த ரவிளூ அங்கும் என்ன செய்வது என அறியாதவனாய் தொடர்ந்து பயணிக்க விரும்பி, எப்படியோ ஒரு சுற்றுலா ஸ்தலத்தைச் சென்றடைந்தான். இரவு நேரம், குளிர் ஒருபுறம், எங்கு தங்குவது, யார் துணை என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காதவனாக உறக்கத்தில் உலாத்திக்கொண்டிருந்த அவனது மனது அமைதியை இழந்தது. உடலில் உதறல், உள்ளத்தில் உளரல்ளூ இனி மீண்டும் வீட்டுக்குப் போகனுமா? என்று அவனே தன் மனதில் கேட்டுக்கொண்டு 'வேண்டாம்' என பதிலும் சொல்லிக்கொண்டான். 

அப்படி என்றால் என்ன செய்வது என தன்னிடமே அவன் கேட்டக் கேள்விக்கு, 'தற்கொலை செய்துகொள்' என்ற பதிலையே அவனது மனது ரீங்கரித்துக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த துணிப்பையினை அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலைக்கு ஆயத்தமானான் ரவி. தகப்பன் தனக்குக் கொடுத்த சிறிய தண்டணைக்காக, தனக்குத் தானே இத்தனை பெரிய தண்டணையை கொடுக்கவேண்டுமா என்பதையெல்லாம் நினைக்க அவன்கு கணங்கள் இல்லை. தூக்கு மேடை கைதியைப் போலை தன்னையே அதில் ஏற்றிக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டு, துக்கத்தோடு இருந்த ரவியை தூக்கம் தாலாட்டி தூங்கவைத்தது, தன்னையும் அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான் ரவி. காலை 7 மணிளூ சூரியக் கதிர் தன் மேல் பட எழுந்துகொண்ட அவன் திடுக்கிட்டான்ளூ 'நான் சாகனும் என்றுதானே வந்தேன், எப்படி தூங்கினேன்' என்று விழித்த அவனது கண்களுக்கு முன்னால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பட்டது. உல்லாசமாய், ஜோடியாய், குடும்பமாய், குழந்தைகளுடன் வந்த மக்களைக் கண்ட ரவி தனிமையை உணர்ந்தான். தனது தவற்றினை உணர்ந்து, வீட்டை நோக்கிப் பயணமானான் ரவிளூ வழியில் பழங்கால ஆலயம் ஒன்றின் படியில் அவனது கால்கள் முழங்காலிட்டது. மனம் இறைவனை நோக்கிப் பார்த்தது, மௌனம் சற்று நேரம் நீடித்தது, அவனது வாழ்க்கையின் கருமேகங்களெல்லாம் கண்ணீராய் பொழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவனது மனதோ அமைதி அடைந்தது. பூட்டிய ஆலயத்தின் வெளியே நின்றிருந்தாலும் ரவியின் மனதிற்குள் இறைவன் நுழைந்திருந்தார். ரவி தற்கொலை செய்துகொள்ளவில்லை ஆனால், இறைவனின் சந்நிதியில் தன்னைக் கொலை செய்திருந்தான். அன்று அவனுக்குப் பிறந்த நாள். சாவு அவனுக்கு நிஜமாகாமல் நிழலானது. தன்னைக் காப்பாற்றியது இயற்கையான தூக்கமல்ல இறைவன் என்பதை உணர்ந்த அவனது வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமானது. 

இடிந்து போனதற்காக இடித்துக்கொள்வதும்
அடிக்கப்பட்டதற்காக அழித்துக்கொள்வதும்
துக்கத்தை மறக்கத் தூக்கில் தொங்குவதும்
கண்ணீருக்கு விடையாய் கல்லறையை நினைப்பதும் ஏன்? 
வல்லவரை நினைத்து வா! அவர் வாழவைப்பார். 



கடலில் கரைந்த கன்னி!


கடலில் கரைந்த கன்னி!



சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் தன் கதிர்களைக் சுருக்கிக்கொண்டு மறைந்துகொண்டிருந்தபோது, அதனைப் பார்க்க மனதில்லாதவன் போல கிழக்கு திசையில் உள்ள கடலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். ஏறக்குறைய இருபத்து மூன்று வயது இருக்கும். எடுப்பான தோற்றம், மாநிறம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த வாலிபன். கடற்கரையில் காற்று வாங்கும்படி வந்த பலரது இரைச்சல்கள் அந்த வாலிபனின் சிந்தையை சிதறடிக்கவில்லை. எதையோ ஆழ்ந்து சித்தித்தவன் போல, எதையோ இழந்துவிட்டவன் போல, தனிமை தான் இனி கதி என்ற மனதுடன் மண் தரையில் அமர்ந்திருந்தான். கடற்கரை மணலில் அவனது விரல்கள் யாரும் புரியா புதிராக சில கோலங்களை வரைந்துகொண்டிருந்தன. தனக்கு மேலே எழுதப்பட்டபோதிலும் மண்ணினால் கூட விளங்க இயலாத வரிகள் அவை. கடலில் ஆடி ஆடி ஆரவாரிக்கும் அலைகளை அவனது விழிகள் விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்படி என்ன தேடினால் கடலலையில்? என்ன நடந்தது அவனது வாழ்க்கையில்? 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து முதன் முறையாக பட்டணத்தை நோக்கிப் பயணமானவன் அவன். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெறவே கிராமம் அவனை பட்டணத்திற்கு வழிவிட்டனுப்பியிருந்தது. கிராமத்து மண்ணிலிருந்து பட்டணத்திற்கு வந்த அவனுக்கு பட்டணத்தின் கலாச்சாரத்துடன் இணைந்து செல்லவே பல மாதங்கள் பிடித்தது. பட்டணத்தின் பகட்டைக் கண்டதும் அதில் மயங்கி, பட்டணத்தில் தான் பிறந்திருக்கக் கூடாதா? எனது பெற்றோர் ஏன் கிராமத்தில் வாழுகின்றார்கள்? என்ற சிந்தை அவனது மனதை சிறைப்பிடித்திருந்தது. பட்டணத்து வாலிபர்களின் உடைகளும், உறவுகளும் இவனுக்கு தொடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்;த்திப் பார்க்கச் செய்தன. அவர்களைப் போல வாழவேண்டும் என விருப்பம்? ஆனால் தொடங்குவது எப்படி? நண்பனாக என்னை யார் ஏற்றுக்கொள்ளுவார்கள்? என்ற கேள்விகள் அவனது மனதில் சந்தேகத்தையே விதைத்துக்கொண்டிருந்தன. பெற்றோரை விட்டுப் பிரியவே தொடக்கத்தில் மனதில்லாத அவனது பாசத்தை பட்டணத்துக் காற்று நாளுக்கு நாள் வாரிச் சுருட்டிக்கொண்டுபோனது. 

ஏங்க மொவன் கிட்டயிருந்து கடுதாசி ஏதாச்சும் வந்துச்சா? என கிராமத்தில் அவனது தாய் தனது கணவனிடம் கேட்க, 'நானும் அன் கடுதாசிக்குத்தான் காத்துட்டுருக்கேன்' என்ற பதில் தான் விடையானது தாய்க்கு. மகனைக் குறித்து பெற்றோர் ஏங்கிக்கொண்டிருக்க, பெற்றோரைக் குறித்த நினைவு இவனுக்கு மங்கிக்கொண்டிருந்ததுளூ ஒரு கட்டத்தில் அது மறைந்து மயானத்தை நோக்கியும் பயணித்துவிட்டது. இதற்கு காரணம் அவன் பட்டணத்தில் வாழ்ந்த வாழ்க்கைதான். 

கல்லூரியில் தனிமையாகத் தொடங்கிய அவனுக்கு நாட்கள் சிலவற்றிலேயே நட்புகள் வளரத்தொடங்கியது. கிராமத்தை மறைத்து தான் பட்டணத்துக்காரன் என்பதை நிரூபிக்கும்படியாக அவன் ஆடைகள் முதல் அங்கங்கள் வரையிலும் முயற்சித்துக்கொண்டிருந்தான். அவனது உடையிலும், உள்ளத்திலும் பட்டணம் ஏறியது. பெற்றோரின் பயம் அற்ற சூழ்நிலைளூ தானே ராஜா என்ற மதி மயக்கம் அவனை தன்னிடம் இழுத்துக்கொண்டது. கெட்ட நண்பர்களின் ஐக்கியம், சகவாசம் மெல்ல மெல்ல அவனைச் சடலமாக்கப் போகின்றன என்பதை அறியாமல் அவர்களுடனான உறவில் உல்லாசம் கொண்டாடத்தொடங்கினான். போதைக்கு அடிமைளூ திரையரங்கே வீடு எனத் திரிந்தவனை மேலும் ஒரு வலை சுண்டி இழுத்துக்கொண்டது.....

நண்பர்கள் மத்தியில் நாட்களைக் கடத்திய அவன் ஒரு நண்பியின் நகையில் (சிரிப்பில்) நாட்களைக் கழிக்கத் தொடங்கினான். தொடக்கத்தில் உடன் கல்லூரி மாணவியாக வலம் வந்த அவளின் செம்பழுப்பு நிறமும், பழுப்பேறிய கருங் கூந்தலும் இவனை அவளது ரசிகனாக்கியவைகள். பேசிப் பழகும் தூரம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்த இவனது நெஞ்சம், ஒரு முறை அவள் தன்னிடத்தில் ஒரு உதவி கேட்க வந்தபோது அவளது பேச்சிலேயே தாகம் தணித்துக்கொண்டது. அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தான், அனுப்பிய பெற்றோரை மறந்து, ஆங்காங்கே நின்றான் அவளது தரிசனம் காணளூ தங்கிய அறைகளிலெல்லாம் தொங்கியது அவளது புகைப்படங்கள்தான்ளூ  உடன் மாணவியாய்ப் பார்த்த அவளிடம் சகோதரனைப் போல ஏய்த்துப் பழகியதால் அவள் கபடமில்லாத உறவில் அவனோடு நெருங்கிப் பழகினாள். 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று அவளிடம் சொல்வதற்காக அவன் உதட்டைப் பிதுக்கிப் பிதுக்கிப் கைகளைப் பிசைந்துகொண்டிருந்தபோதிலும் அவனது அங்க மொழிகளை அவள் அறிந்துகொள்ளவில்லை. ஒரு முறை தன்னிடத்தில் ஒரு உதவிக்காக வந்திருந்த அவளுக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து தனது உடலின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டான். விழித்தெழுந்த அவள் வாழ மனமின்றி அவனது தடுப்புகளையும் மீறி ஓடிச் சென்றாள் கடற்கரைக்குளூ ஆறுகள் சங்கமமாகும் கடலில் தற்கொலை செய்து தன்னையும் சங்கமமாக்கினாள். 

மாணவியை மனைவியாக்க நினைத்து, அவளது உடலை உருக்குலைத்துவிட்டு, கடலில் கரைந்துபோன கன்னியை நினைத்து கடற்கரையிலே உடைந்துபோய் உட்கார்ந்திருப்பதையே தனது வாழ்க்கையாக்கிக்கொண்டான் அந்த வாலிபன். வாழவேண்டிய வயதில்ளூ ஒருத்தி வாழ்க்கையைக் கெடுத்ததால் இவனது வாழ்க்கையும் கெட்டுப்போனது. பெற்றோரை நினைவலைகளை விட்டு அகற்றிவிட்டு, கடற்கரையிலே தினமும் அந்தப் பெண்ணுக்காக நினைவு நாள் தியானம் செய்துகொண்டிருந்தது அவன் மனது. கடலில் கரைந்த பெண்னையே நினைத்து நினைத்து கருகிப்போனதுதான் அவனுக்கு மிஞ்சியது. 

இயேசுவின் அன்பிற்கு முன்னால் 
முந்துவதில்லை இவ்வுலகத்தின் அன்பு
சிந்தையை சீரழிக்கும் உறவுகளால்
உணர்விழந்தால் வாழ்வே உதிர்ந்துவிடும் 

பெற்றவரைப் பிரிந்தால் நீதான் மற்றவன்
முற்றும் கற்க நீ முடங்கினால் போதும்
போதையில் வாழ உன் வாழ்வே முற்றும்
அன்பிற்கு அலையாதே அன்பரண்டை ஓடிவா! 


நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்ளூ அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.(ஏசா 55:2)

ஐயோ பசிக்குதே!

ஐயோ பசிக்குதே!



எங்கு பார்த்தாலும், கடல் நீர் ஆரவாரித்துக்கொண்டிருந்தது. அலைகளின் ஆனந்த நடனத்தில் கப்பலும் இசைந்தே ஆடிக்கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் ஆனந்தமாய் தனது கப்பற் பயணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அத்தனை பேரின் ஆனந்தமும், அங்கிருந்த ஒரு மனிதரின் சோகத்தை மாற்றவில்லை. சோகமாயிருந்த அந்த மனிதர் பசியால் களைத்துப்போயிருந்தார். கப்பலில் ஏறியது முதல், எதுவும் உண்ணாமல், யாரிடமும் கேட்காமல் தனிமையில் அமைதியாகப் பயணித்துக்கொண்டிருந்தார்ளூ அதுதான் அவரது வாழ்வின் முதல் கப்பல் பயணம். கப்பல் பயணச் சீட்டு அவருக்கு வேறாருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது கையிலோ காசு ஏதும் கொடுக்கப்படவில்லை. எனவே உணவு உண்ண கப்பலில் உள்ள உணவகத்தில் காசு கொடுக்க வேண்டுமோ எனக் கருதி உணவு வாங்கச் செல்லாமல் தனித்தே இருந்தார். எல்லாரும் வயிறார உண்டு களித்திருக்கும்போது, இவரோ பசியால் துடித்துக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழிந்தனளூ பசியினை அடக்கமுடியாதவராக, உணவகத்தின் உள்ளே சென்றார். அங்கே அவருக்கு அமோக வரவேற்பு, அரச மரியாதையுடன் உணவு வழங்கப்பட்டது. பயந்து பயந்து உண்டவர் மெல்ல வெளியேறும்போது, அங்கே இருந்த வேலையாள் ஒருவரிடம் 'காசு கொடுக்கவேண்டுமா?' என விசாரித்தார். அந்த வேலையாள் சிரித்தார்ளூ ஒன்றும் புரியாத நிலையில் இருந்த அந்த பயணியிடம் 'ஐயா, உங்கள உணவுக்கான காச பயணச் சீட்டு பெறும்போதே செலுத்தப்பட்டிருக்கின்றது' என்றார். திடுக்கிட்ட அந்த பயணி, தனது அறியாமையை நினைத்து நொந்துகொண்டார்.

நாம் பாவத்தில் மரிக்கவேண்டிய அவசியமில்லை நமது பாவங்களுக்காக சிலுவையில் விலைக்கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்ளூ நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்ததுளூ அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.(ஏசா 53:5)